மும்மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள்…!

மும்மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள்…!

Share it if you like it

ஜனவரி 21, 1972 அன்று மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுராவிற்கு மாநில உரிமை வழங்கப்பட்டது. அதனையொட்டி இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் “மாநில தினத்தன்று மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மக்களுக்கு வாழ்த்துக்கள். இந்த அழகான மாநிலங்களில் வசிக்கும் அனைவருக்கும் பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்திற்காக எனது வாழ்த்துக்கள்” என்று அவரது அதிகாரகரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி “திரிபுராவின் எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள். திரிபுராவின் முன்மாதிரியான மரபுகள் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அதன் மக்கள் தங்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். திரிபுராவின் குடிமக்களின் தொடர்ச்சியான செழிப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன் என்று அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Share it if you like it