மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் மற்றும் நண்பர்கள்- ’போக்சோ’ சட்டத்தில் கைது!

மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் மற்றும் நண்பர்கள்- ’போக்சோ’ சட்டத்தில் கைது!

Share it if you like it

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அடுத்துள்ள ரங்கபாளையத்தை சேர்ந்த(6)வயது,(8)வயது சிறுமி மற்றும் (7)வயது சிறுவனுக்கு அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணி ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி (68) மற்றும் அவரது  நண்பகளான கணேசன்,ரணவீரன்,ராதாகிருஷ்ணன்,  திருவண், ஆகியோர் அக்குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(7 )வயது சிறுவன் அவர்களிடம் இருந்து தப்பித்து தன் பெற்றோரிடம் அழுதுக்கொண்டே முறையிட்டுள்ளான். இதனை அடுத்து  ஊர் நாட்டாமை சின்னச்சாமி தலைமையில் ஊர்சபை கூடி விவாதிக்கும் பொழுது அங்கு பெரும் கூச்சல்,  குழப்பமும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து.

வத்திராயிருப்பு காவல்துறையினர் அப்பகுதி விரைந்து வந்து குழந்தைகளிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர். இதனை அடுத்து குற்றம் நிருபிக்கப்பட்டதால், ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் போலீஸ் சார் அவர்களை ’போக்சோ’ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it