மாற்றுத்திறனாளி சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக கற்பழித்த காமுகர்களான அலீம், பஷர், அசிம் !

மாற்றுத்திறனாளி சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக கற்பழித்த காமுகர்களான அலீம், பஷர், அசிம் !

Share it if you like it

  • பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை எதிர்த்து நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது பாகிஸ்தான் அரசு. இந்நிலையில் மாற்றுத்திறனாளியான கோமல் பத்ராஸ் என்ற இஸ்லாமியர் அல்லாத சிறுமி, லாகூரின் ஷிப்லி நகரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
  • பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், மாற்று திறனாளி சிறுமி என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி பாலியல் பலாத்காரம் செய்த ஆலிம், பஷர் மற்றும் அசிம் ஆகிய மூன்று நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. வாய் பேச முடியாத தன் அன்பு மகளை கற்பழித்த வேதனை ஒருபுறமும், அவர்கள் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத வேதனை ஒருபுறமும் அவர்களை வாட்டி வதைக்க இதுமட்டுமல்லாமல் கடத்தல்காரர்கள் தங்கள் மகளின் நிர்வாண படங்களையும் தனக்கு அனுப்பியதாக தன் மனவேதனைகளை ஒரு காணொளியில் வெளியிட்டுள்ளனர். அதனை பார்க்கும் ஒவ்வொருவர் இதயமும் சுக்குநூறாய் உடைந்துபோகும் என்பது உண்மை. அந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • இதில் கொடுமை என்னவென்றால் அந்த சிறுமி வாய் பேச முடியாது என்பதால், அந்த நயவஞ்சகர்கள் தன்னை கடத்தும்போதும் வாய் விட்டு கூச்சலிட முடியவில்லை, மேலும் தன்னை கற்பழித்த பிறகு தன்னுடைய வேதனையை சொல்லவும் முடியாமல் மரண வேதனை அனுபவித்து இருப்பதை நாம் நினைத்து பார்த்தாலே நமது ஈரக்குலை எல்லாம் நடுங்குகிறது.
  • இந்த கொடூரமான சம்பவம் வேகமாக பரவியதையடுத்து பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி இந்த சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று உறுதியளித்துள்ளார். ஆனாலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்கலாம் என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு வரவில்லை.

Share it if you like it