விநாயகர் சிலையை உடைத்த காவல்துறையினர் பா.ஜ.க தலைவர் கடும் கண்டனம்..! விடியல் ஆட்சியில் தொடரும் ஹிந்து விரோத போக்கு..! 

விநாயகர் சிலையை உடைத்த காவல்துறையினர் பா.ஜ.க தலைவர் கடும் கண்டனம்..! விடியல் ஆட்சியில் தொடரும் ஹிந்து விரோத போக்கு..! 

Share it if you like it

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எதிராக ஆளும் கட்சி உள்நோக்கத்துடன்  செயல்படுகிறது என்று ஆன்மீக பக்தர்கள், ஆன்மீக பெரியோர்கள், என பலர் தமிழக அரசிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், தி.மு.க அரசு தொடர்ந்து தனது அடக்குமுறையை ஹிந்துக்கள் மீது இன்று வரை காட்டி வருகிறது என்பது கசப்பான உண்மை.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க அரசிற்கு எதிராக மிக கடுமையான குற்றச்சாட்டு ஒன்றினை பதிவு செய்து உள்ளார்.

கரூரில் விநாயகர் சிலையை உடைத்து காவல்துறை அத்துமீறல்! காவல்துறை கண்ணியம் பறந்தது காற்றில். அனைத்து மதங்களையும் மாண்புடன் மதிக்கும் பா.ஜ.க-வில் உள்ளது மதச்சார்பின்மை. ஒரு சாராரை வாழ்த்தி அவர்கள் இந்துக்களைத் தாழ்த்துவதா மதச்சார்பின்மை? இதுவா மதநல்லிணக்கம்?

 


Share it if you like it