கோவில் இடிப்பு : மதமாற்ற முயற்சித்த பாதிரியார் : கைது செய்த போலீசார் !

கோவில் இடிப்பு : மதமாற்ற முயற்சித்த பாதிரியார் : கைது செய்த போலீசார் !

Share it if you like it

வேலூரில் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்ட பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளதாக இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில்,

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த சின்ன தோட்டாளம் கிராமத்தை சேர்ந்த பாதிரியார் பாபு(54) தனக்கு சொந்தமான இடத்தை சுத்தம் செய்வதாக கூறி யாருக்கும் தெரியாமல், அந்த பகுதி பொதுமக்கள் தினமும் பால் ஊற்றி, பூ வைத்து வழிபாடு செய்து வந்த புற்றையும் சேர்த்து இடித்து தள்ளியுள்ளார்.

கிறிஸ்தவர்களின் பிச்சையால் தான் திமுக கட்சி ஆட்சிக்கு வந்தது என பாதிரியார் கூறியும் மறுப்பு தெரிவிக்காத இந்து விரோத திமுகவின் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் பாதிரியார்களை பகைத்துக் கொள்ள விரும்பாத மக்கள் பயந்து ஒதுங்கிய நிலையில் சரஸ்வதி (54) என்ற பெண்மணி மட்டும் போர்க்குரல் எழுப்பியுள்ளார். அந்த பெண்மணியை பாதிரியார் கிறிஸ்தவ மதத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தியதால் காவல் துறையில் மதமாற்ற முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளார். கோவிலை இடித்ததற்கு பாதிரியாரை கைது செய்தால் தான் திராவிட மாடல் அரசுக்கு பிடிக்காது என்பதால் மதமாற்ற முயற்சிக்காக பாதிரியாரை கைது செய்துள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *