வேண்டாம் saree challenge   – பெண்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை !

வேண்டாம் saree challenge – பெண்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை !

Share it if you like it

ஊரடங்கினால் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் அவர்களுடைய அதிக நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். அதிலும் saree challenge போன்று பொழுதை கழிப்பதற்கு வித்தியாசமான போக்குகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக பெண்கள் இதை நம்பி பல வித்தியாசமாக புடவைகளை அணிந்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர். ஆனால் சில மர்ம நபர்கள் அந்த புகைப்படத்தை திருடி மார்பிங் செய்து நிர்வாண படத்தை உருவாக்கி அதை சம்மந்தப்பட்டவர்களிடம் காட்டி பணம் பறிப்பதாக தகவல் வந்ததாக சைபர் கிரைம் அதிகாரிகள் பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே பெண்களே நீங்கள் புடவை அணிவது நல்ல விஷயம் தான், ஆனால் அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் பின்னால் அதுவே உங்களுக்கு ஆபத்தாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Share it if you like it