ஹிந்துக்களை அழிக்க நடத்தப்படும் போர் இது….

ஹிந்துக்களை அழிக்க நடத்தப்படும் போர் இது….

Share it if you like it

ஒடுக்கப்பட்டு பாதுகாப்பு தேடி வரும் இந்துக்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என கேட்பது போராட்டமா?
இந்துக்களை எங்கேயும் வாழவிடக்கூடாது என முடிவு செய்துவிட்டு முஸ்லீம்கள் நடத்தும் நேரடிப்போர்.

குடியுரிமை சட்டம் என்ன சொல்கிறது? முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலே கொடுமைப்படுத்தப்பட்டு துரத்தப்பட்ட சிறுபான்மையினர் இந்தியாவிலே அடைக்கலம் தேடினால் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்படும் என்கிறது.

அங்கே சிறுபான்மையினர் யார் யார்? இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள்.

மியான்மரிலே ரோகிங்யாக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனவே இங்கே அடைக்கலம் கொடுக்கவேண்டும் என கொதித்த கம்யூனிஸ்டுகள், மனித உரிமை ஆர்வலர்கள் எல்லாம் இன்றைக்கு ஏன் கொடுமைப்படுத்தபட்டவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது, குடியுரிமை தரக்கூடாது என்கிறார்கள்?

அவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்பதாலா?

முஸ்லீம்களுக்கு மட்டும் தான் இந்த உலகும் நாடுகளும் மற்றவர்களுக்கு இல்லையா?

பங்களாதேஷிலே 20 சதம் இருந்த இந்துக்கள் எங்கே காணாமல் போனார்கள்…? இதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவர்கள் சொன்னதற்காக இந்து மனித உரிமை ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள். 4 கோடி இந்துக்கள் பங்களாதேஷிலே காணாமல் போயிருக்கிறார்கள்.

1971 இல் இந்துக்களை தேடித்தேடி கொன்றது பாக்கிஸ்தான் ராணுவம். பாக்கிஸ்தானிலே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இந்துவை மதம் மாற மிரடியதால் அடைக்கலம் தேடி இன்றைக்கு டெல்லியிலே வறுத்த வேர்க்கடலை விற்று பிழைக்கிறார்.

இப்படி இந்துக்கள் பாக்கிஸ்தானிலே பங்களாதேஷிலே கொடுமைப்படுத்தப்படும் போது அங்கே இருந்து ஓடி வந்தவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது, குடியுரிமை தரக்கூடாது என்றால் இந்த போராட்டம் இந்துக்களை அழிக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் போர் தானே?

பாக்கிஸ்தானிலே ஆயிஷா பிபி எனும் கிறிஸ்துவ பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அவர் மஸ்ஜித் தண்ணீரை மொண்டு குடித்துவிட்டார் என்பதற்காக ”பிளாஸ்பெமி” அதாவது மதத்தை அவமதித்த குற்றம் சாட்டி பத்தாண்டுகள் தூக்கு தண்டனை கைதியாக வைத்திருந்தார்கள். உச்சநீதிமன்றம் விடுவித்த பின்னர் ரகசியமாக கனடாவுக்கு குடும்பத்தோடு கூட்டி செல்லப்பட்டார்.

பாக்கிஸ்தானிலே இந்துக்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் மலம் அள்ளும் வேலை தான் என அரசும் ராணுவமும் அறிவிக்கிறது. இது தான் இரு நாடுகளிலேயும் முஸ்லீம் அல்லாத மதத்தினரின் நிலை.

இந்த நிலையிலே இருந்து தப்பி ஓடி வருபவர்களுக்கு புகலிடம் தருவது தானே நியாயம்? அதை எதிர்த்தால் என்ன பொருள்?

இந்த கலவரம் இந்துக்களை முற்றாக அழித்தொழிக்கவேண்டும் என நடத்தப்படும் போர்.

-ராஜா சங்கர்


Share it if you like it

One thought on “ஹிந்துக்களை அழிக்க நடத்தப்படும் போர் இது….

Comments are closed.