120 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த சமூக விரோத கும்பல்..! உறங்கும் இந்து அறநிலையத்துறை- களத்தில் இறங்கிய VHP…!

120 ஏக்கர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த சமூக விரோத கும்பல்..! உறங்கும் இந்து அறநிலையத்துறை- களத்தில் இறங்கிய VHP…!

Share it if you like it

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை திம்மராஜபுரம் கிரமாமம் பகுதியில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் ஆலயம் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவில் ஆகும். இவ்வாலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இக்கோவிலுக்கு என்று 120 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் உள்ளது. சில சமூக விரோதிகள் சட்டவிரோதமாக நிலத்தை தற்பொழுது ஆக்கிரமித்துள்ளனர்.

கோவில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம். தங்களின் பெயருக்கு மாற்ற பட்டா தயார் செய்யும் வேலைகளில் சிலர் இறங்கியுள்ளனர். கோவில் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படாததே இதற்கு காரணம் என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை அறிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் சமூக விரோத கும்பலுக்கு எதிராக தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மூத்த நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it