ஹிந்து சிறுவனை கடத்தி மதம் மாற்றிய இஸ்லாமிய குடும்பம்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 16-வயது ஹிந்து வாலிபரை கடத்தி 22-வயது முஸ்லீம் பெண்ணிற்கு திருமணம் செய்த வழக்கில் 4 நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்று கிழமை காணாமல் போன தனது மகனை மூளை சலவை செய்து முகமது ஹனீப்பின் மகளான சிம்ரன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக, சிறுவனின் குடும்பத்தினர் காக்கேடியோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம், வெளிச்சத்திற்கு வர துவங்கியதை அடுத்து ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதையடுத்து, புகார் அடிப்படையில் பெண் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இது குறித்த செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தாமரை டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.
அதன் லிங்க் இதோ.