இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததால் தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர் பாதுகாப்பு படையினர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள அல்ஷிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினரால் 2 லஷ்க்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு தீவிரவாதிகளும் மொரிஃபத் மக்பூல் மற்றும் அப்ரார் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான அப்ரார், பண்டிட் சஞ்சய் சர்மா கொலை வழக்கில் தொடர்புடையவன் என காஷ்மீர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர் பாதுகாப்பு படை வீரர்கள்.