காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் நடத்திய ரெய்டில் 5 கோடி ரூபாய் சிக்கியது !

காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் நடத்திய ரெய்டில் 5 கோடி ரூபாய் சிக்கியது !

Share it if you like it

ஹரியாணாவின் சோனிபட் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார். ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் அவர் சுரங்க தொழில் நடத்தி வருகிறார். இந்த சூழலில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இவ் வழக்கு தொடர்பாக சுரேந்தர் பன்வாரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். யமுனா நகர், சோனிபட், மொகாலி, பரிதாபாத், சண்டிகர், கர்னால் உள்ளிட்ட நகரங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுரேந்தர் பன்வாரின் நண்பர்கள் சுரேஷ் தியாகி, மனோஜ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய ரெய்டில் 5 கோடி ரூபாய் ரொக்கம், வெளிநாட்டு ஆயுதங்கள், தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Share it if you like it