திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தில் ரூபாய் 8 லட்சத்தி 59 ஆயிரம் பறிமுதல் !

திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தில் ரூபாய் 8 லட்சத்தி 59 ஆயிரம் பறிமுதல் !

Share it if you like it

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் வாகனத்தை சோதனை செய்ததில் ரூபாய் 8 லட்சத்தி 59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி வரை மட்டுமே தேர்தல் பிரச்சாரம் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல பகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் பொதுமக்களுக்கு பணம் பட்டு வாட செய்யப்படுகிறதா என தேர்தல் பறக்கும் படையினர் முக்கிய சோதனை சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோத்தகிரி திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் என்பவரது வாகனத்தை கோத்தகிரி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தை அவரது ஓட்டுநர் இயக்கி வந்தநிலையில் அந்த வாகனத்தில் 8 இலட்சத்து 59 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கண்ணன் கோத்தகிரி நகர் பகுதியில் மளிகை டிரேடர்ஸ் நடத்தி வருவதால் இந்த பணம் அவருடைய தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதா அல்லது தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அந்த பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல்தறையினர் விசாரணை நடத்தினர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *