கேரளாவில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் – ராஜ்நாத் சிங் !

கேரளாவில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் – ராஜ்நாத் சிங் !

Share it if you like it

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நெருக்கடியை பா.ஜ.க சவாலாக எடுத்துள்ளது. எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பா.ஜ., நாட்டின் மிகவும் நம்பகமான கட்சி.

நாட்டை பலவீனப்படுத்த சதி நடக்கிறது. ராம நவமி கொண்டாட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். ராமரை எதிர்த்தவர்கள் நாட்டில் வீழ்ச்சியை சந்தித்தனர். இது நம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேச்சும், செயலும் வேறு வேறு. வரும் லோக்சபா தேர்தலில் கேரளாவில் பாஜக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *