கொரோனா எதிரொலி- வீட்டு வாடகை தள்ளுபடி, மேலும் உதவி செய்ய தயார்-ஹாஜா மொய்தீனின் தியாக உள்ளம்!

கொரோனா எதிரொலி- வீட்டு வாடகை தள்ளுபடி, மேலும் உதவி செய்ய தயார்-ஹாஜா மொய்தீனின் தியாக உள்ளம்!

Share it if you like it

கொரோனா என்னும் சொல் உலக, நாடுகளையே கடுமையாக, அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பல, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள், இன்னுயிரை இழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இதுவரை 25 நபர்கள், உயிர் இழந்துள்ளதாக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா, தொற்று 42 நபர்களை எட்டியுள்ளது. பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு, பலர் தங்களின் இல்லங்களிலேயே, இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. மனிதாபிமானம் கொண்ட நபர்கள், சேவா பாரதி, ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, போன்ற தன்னார்வலர்கள் அமைப்பும், தங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு, செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, ஹாஜா மொய்தீன் ஊரடங்கு உத்தரவு காரணமாக, பலரும் வேலையிழந்துள்ளதை கருத்தில் கொண்டு.

தனது அடுக்குமாடி குடியிருப்பில், வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட, குடும்பத்தினரின் நலன் கருதி ஒரு மாத வாடகையை, தள்ளுபடி செய்ததுள்ளார். எதிர்வரும் காலத்தில் சூழ்நிலை எப்படி இருக்குமோ, அதற்கு ஏற்ப தமது குடியிருப்பு, வாசிகளுக்கு உதவி செய்ய தயார், என்று தெரிவித்துள்ளார். விளம்பரம் விரும்பும் இந்த காலத்தில், தனது புகைப்படத்தை பத்திரிக்கைகளில், வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுகொண்டுள்ளார். இது அவரின் நேர்மையான எண்ணத்தையும், தூய உள்ளத்தையும் காட்டுவதாக குடியிருப்பு வாசிகள் கூறியுள்ளனர்.


Share it if you like it