அடேங்கப்பா ! 100 கோடி லஞ்சமா ? 170 மொபைல் போனா ?

அடேங்கப்பா ! 100 கோடி லஞ்சமா ? 170 மொபைல் போனா ?

Share it if you like it

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டு உள்ளது; அரசியல்வாதி என்பதற்காக அவருக்கு சலுகை காட்ட முடியாது” என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் முறையிட்டு உள்ளார்.

இந்த மனுவிற்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் தரப்பட்டு உள்ளது. லஞ்சம் அளித்தவருக்கு ரூ.195 கோடி லாபம் கிடைக்கும் வகையில், அவருக்கு சாதகமாக கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வலுவான ஆதாரம் இருந்த காரணத்தினால் தான் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அரசியல்வாதி என்பதற்காக அவருக்கு சலுகை காட்ட முடியாது.

மதுபானக் கொள்கை முறைகேடு நடந்த போது கெஜ்ரிவால் 170 மொபைல்போன்களை பயன்படுத்தி உள்ளார். பிறகு, அவருடன் சேர்ந்து 36 பேர் அதனை அழித்து உள்ளனர். சோதனை மற்றும் விசாரணையின் போது, தற்போது பயன்படுத்தும் மொபைல்போனின் கடவுச்சொல்லை பகிர்ந்து கொள்ள மறுக்கிறார். விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்குவது கிடையாது. ஆவணங்களில் உள்ளவற்றுக்கு முரணாக பதில் அளிக்கிறார். இவ்வாறு அமலாக்கத்துறை தனது மனுவில் தெரிவித்து உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *