பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை : ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் !

பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை : ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் !

Share it if you like it

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் சீனிவாசன் என்பவர், பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, உள்ளூர் தணிக்கைக்குழு உதவி இயக்குநர் பூங்குழலி மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமிக்கு லஞ்சம் கொடுக்கவுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயைக் கைப்பற்றினர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *