நீலகிரியை தொடர்ந்து திருப்பூரிலும் கடையடைப்பு!

நீலகிரியை தொடர்ந்து திருப்பூரிலும் கடையடைப்பு!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவிற்கு எதிராக நீலகிரியை தொடர்ந்து திருப்பூரிலும் பொதுமக்கள் கடையடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தி.மு.க.வின் மூத்த தலைவரும், ஆபாச பேச்சாளருமாக இருப்பவர் ஆ.ராசா. இவர், நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது, கருத்துக்கள் ஹிந்துக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் இருக்கும். இதுதவிர, தேசத்திற்கு எதிராகவும் பிரிவினையை தூண்டும் வகையிலும் இவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஆ. ராசா கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசினார்;

’நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார்.

ஆபாச பேச்சாளரின் கருத்திற்கு பா.ஜ.க, ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆ.ராசாவின் கருத்திற்கு எதிராக, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கடையடைப்பு செய்து இருக்கும் சம்பவம் ஆட்சியாளர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it