எந்த கொம்பனிடமும் விவாதம் செய்ய தயார் – பிரபல எழுத்தாளர் நேரடி சவால்!

எந்த கொம்பனிடமும் விவாதம் செய்ய தயார் – பிரபல எழுத்தாளர் நேரடி சவால்!

Share it if you like it

தி.மு.க. எம்.பி. ஆ. ராசா தெரிவித்த கருத்திற்கு சீமான் ஆதரவு கரம் நீட்டி இருந்தார். இந்த நிலையில், மனுதர்மம் மற்றும் ஹிந்து மதம் குறித்து எந்த கொம்பனிடமும் விவாதம் செய்ய நான் தயார் என பிரபல எழுத்தாளர் பிரபாகரன் நேரடி சவால் விடுத்து இருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆ. ராசா. இவரது, கருத்துக்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை புண்படுத்தும் வகையில் இருக்கும். அந்த வகையில், இவரின் பேச்சு தமிழகத்தையும் கடந்த நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி விடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார் ;

நீ கிறிஸ்தவனாக இஸ்லாமியனாக பெர்சியனாக இல்லை என்றால் ஹிந்துவாக தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? ஹிந்துவாக இருக்கும் வரை சூத்திரன்; சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர், விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும் என பேசி இருந்தார். 

ஆ. ராசாவின் இந்த பேச்சு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பிரபல எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளருமான பிரபாகரன் மீடியான் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மனுதர்மம் மற்றும் ஹிந்து மதம் குறித்து தம்மிடம் விவாதம் செய்ய எந்த கொம்பன் தயார் என பகீர் சவாலை விடுத்து இருக்கிறார். பிரபாகரன் பேசிய காணொளி லிங்க் இதோ.

ஆ.ராசாவின் இழிவான பேச்சிற்கு சீமான், திருமாவளன், வீரமணி உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it