நகைக்கடையில் கைவரிசை: சிக்கிய தி.மு.க. நிர்வாகி!

நகைக்கடையில் கைவரிசை: சிக்கிய தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

நகைக்கடையில் திருடி சிக்கிக் கொண்ட தி.மு.க. நிர்வாகியின் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடியல் ஆட்சியில், தமிழகம் வளர்ச்சியை நோக்கி செல்கிறதோ இல்லையோ. கொலை, கொள்ளை, திருட்டு, என சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அந்த அளவிற்கு, தமிழகத்தின் நிலைமை இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இதுதவிர, தி.மு.க.வை சேர்ந்த கழக கண்மணிகள் செய்து வரும் அட்டூழியங்கள், அடாவடிகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே நிதர்சனம்.

அதனைமெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. நிர்வாகி ஒருவர் நகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. அதுகுறித்து, விவரிக்கிறது இந்த தொகுப்பு.

திருச்செந்தூர் தொகுதி குரும்பூர் தி.மு.க. நகரச் செயலாளராக இருப்பவர் ராஜன். இவரது, மனைவி தேவி அங்கமங்கலம் ஊராட்சியின் தி.மு.க. வார்டு செயலாளராக இருந்து வருகிறார். இவர், ஏரல் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு சென்று இருக்கிறார். அப்போது, கடை ஊழியர் அசந்த நேரம் பார்த்து தனது கைவரிசையை தி.மு.க. நிர்வாகி காட்டி இருக்கிறார். இக்காட்சிகள், அனைத்தும் கடையில் இருந்த சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்தான, காணொளியினை இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் ஏ.டி. இளங்கோ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it