வேளச்சேரி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஹசன் மெளலானா மீது ஃபாத்திமா என்பவர் பகீர் புகார் ஒன்றினை தெரிவித்து உள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் சொல்லொண்ணா துயரமும் கடும் மன அழுத்தத்தையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொடுத்து உள்ளதாக தனது வேதனையை பதிவு செய்து காணொளி ஒன்றினை வெளியிட்டு உள்ளார். பா.ஜ.க என்றால் உடனே குரல் கொடுக்கும் ஜோதிமணி அவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன்வருவாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.