மேல் தட்டா… கீழ் தட்டா? ஜாதிய பட இயக்குனர்களை சல்லி சல்லியாக நொறுக்கிய இமான் அண்ணாச்சி!

மேல் தட்டா… கீழ் தட்டா? ஜாதிய பட இயக்குனர்களை சல்லி சல்லியாக நொறுக்கிய இமான் அண்ணாச்சி!

Share it if you like it

திரையுலகில் தற்போதைய புதிய ட்ரெண்ட் மேல் தட்டா, கீழ் தட்டா? என்றாகி விட்டது என்று மாமன்னன் திரைப்படத்தையும், மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் விளாசித் தள்ளி இருக்கிறார் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி.

சென்னையில் புதுவேதம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, “சினிமா இன்று வேற லெவலில் சென்றுவிட்டது. அது 2 ரகமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று அனைவரும் படம் பார்த்து வெளியே வரும்போது காரித் துப்பிவிட்டு வெளியே வரவேண்டும். அதனை பற்றி பத்திரிகைகள் எழுதுவார்கள். யூடியூப்பை திறந்ததும் படம் ஓடுமா? ஓடாதா? என்று கூறுவார்கள். காரித் துப்புவதை போல தலைப்பு வைத்து, உள்ளே நல்ல வகையில் கூறி இருப்பார்கள்.

ஆனால், தற்போது புதிய ட்ரெண்ட் வந்துள்ளது. படத்தை இயக்குனர் எடுக்கிறார் என்றால், அவர் சமுதாய படம் எடுக்கிறேன் என்கிறார். குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்து படம் எடுத்தால் பரபரப்பாக ஓடுகிறது. இயக்குனர் படம் எடுக்கிறார் என்றால், அது கீழ் தட்டா? மேல் தட்டா? என்று தட்டு தட்டாக கேட்கத் தொடங்கி விட்டார்கள். இங்கு மாபெரும் படங்களை கொடுத்த இயக்குனர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அவர்களின் படத்தில் ஜாதிய வாடை இருந்திருக்குமா?

ஆகவே, இவ்வாறான நிலையில் இருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். இதனை ஒரு காமெடியனாக இல்லாமல் தமிழனாக, தமிழ் மக்களாக இயக்குனர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். நல்ல கதைகளை தேர்வு செய்து படத்தை எடுங்கள். நமது தமிழ் படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அதாவது, இயக்குனர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோர் பட்டியலின மக்கள் நசுக்கப்பட்டதாகவும், பிதுக்கப்பட்டதாகவும் படம் எடுப்பதைத்தான் இப்படி மறைமுகமாகக் குத்திக் காட்டி இருக்கிறார் இமான் அண்ணாச்சி. அந்த வகையில், சமீபத்தில் வந்த உதயநிதியின் மாமன்னன் திரைப்படத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it