தெரியாம சொல்லிட்டேன் கதறிய நடிகர் சூரி!

தெரியாம சொல்லிட்டேன் கதறிய நடிகர் சூரி!

Share it if you like it

நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரி கோவில்கள் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். இதையடுத்து, எழுந்த கடும் விமர்சனங்களை சமாளிக்க முடியாமல் நானும் தெய்வ பக்தி கொண்டவன் தான் என கதறி இருக்கிறார்.

மக்களின் கவலையை மறக்க செய்யும் பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் ஒன்றாக இருந்து வருகிறது. மக்களுக்கு நற்கருத்துக்களை போதித்து அவர்களை நல்வழிப்படுத்தும், பள்ளிக் கூடமாக முன்பு திரைத்துறை இருந்து வந்தது. ஆனால், தற்போது தேசப்பிரிவினையை உருவாக்கும் வகையிலும், ஜாதி மோதல்களை அப்பாவி இளைஞர்கள் மனதில் திணிக்கும் வகையிலும் தமிழ் சினிமா நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.

குறிப்பாக, கிறிஸ்தவமிஷரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் கைகளில் தமிழ் சினிமா சென்று விட்டது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதுதவிர, தி.மு.க. தி.க. மற்றும் கம்யூனிஸத்திற்கு ஆதரவாக பேசினால் மட்டுமே தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலையை திரைத்துறையில் ஊடுறுவி இருக்கும் மாஃபியாக்கள் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

இதன்காரணமாக, நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் வேண்டுமென்றே ஹிந்துக்களை சீண்டும் நோக்கில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்த திரைத்துறை இன்று நாத்திகர்களின் கூடாரமாக மாறி இருக்கிறது என்பதே கசப்பான உண்மை. குறிப்பாக, கடவுள் மறுப்பு, தேசவிரோத பேச்சு மற்றும் பாரதப் பிரமதர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் நடிகர், நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் அதிக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, மதுரையில் நடந்த விருமன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட காமெடி நடிகர் பரோட்டா சூரி, கூறியதாவது; “ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட, ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட ஒரு மாணவரை படிக்க வைப்பது பல நூறு ஆண்டுகள் பேசும். அதை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் அண்ணன் சூர்யாவுக்கு நன்றிகள்” என்று கூறியிருந்தார். இவரின், கருத்து ஹிந்துக்களின் மத்தியில் கடும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தன. இதையடுத்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் சூரிக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

திரைத்துறையை சேர்ந்தவர்கள் எதற்கெடுத்தாலும் ஹிந்து கோயில்களை மட்டுமே குறி வைத்து தாக்கி பேசி வருகின்றனர். கிறிஸ்தவர்களின் சர்ச் பற்றியோ அல்லது முஸ்லீம்களின் மசூதி பற்றியோ இவர்கள் ஏன்? பேசுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி நடிகர் சூரியை நெட்டிசன்கள் பரோட்டாவிற்கு மாவு பிசைவது போன்று பிசைந்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், நான் தெய்வ பக்தி நிறைந்தவன். நான் படிக்காதவன், மதுரை மீனாட்சி மீது மிகுந்த பக்தி கொண்டவன் என கதறி இருக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it