வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் சூரி.அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக தன்னுடைய கேரவனில் ஒரு கிராமத்திற்கு சென்றுள்ளார். சூட்டிங் பார்க்க பல சிறுவர் சிறுமிகள் அங்கு வந்துள்ளனர். அப்போது கேரவனில் உள்ள நடிகர் சூரியை பார்த்து ஒரே ஒரு தடவை மட்டும் கேரவனில் உள்ளே வந்து பாக்குறோம் என்று வெள்ளந்தியாக கேட்க, அனைத்து குழந்தைகளையும் கேரவனில் ஏற்றி அழகு பாத்துள்ளார் நடிகர் சூரி. உள்ளே சென்றதும் என்ன உள்ளே குளிராக இருக்கு என்று அச்சிறுவர் சிறுமிகள் கேட்க அது AC டா என்று செல்லமாக கூறியுள்ளார். இதை காணொளியாக எடுத்த சூரி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பலரும் அந்த பதிவினை பாராட்டி லைக் செய்து வருகின்றனர்.