ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை!

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் கடும் எச்சரிக்கை!

Share it if you like it

அரசு பதவியில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர்கள், மீம்ஸ்கள், பேனர்கள், வாயிலாக கருத்து தெரிவித்தால் உடனே அவர்கள் இயக்கத்தை விட்டு நீக்கப்படுவார்கள் என நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சிங்கபூர் மற்றும் மலேசியா போன்ற அயல்நாடுகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். இவரின், திரைப்படம் எப்பொழுது எல்லாம் திரைக்கு வருகிறதோ, அப்பொழுது எல்லாம் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்குவது இவரது வாடிக்கை. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் கண்டது விஜய் மக்கள் இயக்கம். நேரடியாக, அரசியலுக்கு வராமல் தனது ஆதரவாளர்களை களமிறக்கி, அரசியலை ஆழம் பார்க்கிறார் என்று பிரபல அரசியல் விமர்சகர் நடிகர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இப்படியாக, நடிகர் விஜய் தொடர்ந்து ஏதேனும் சர்ச்சையில் சிக்குவதும். அதற்கு, விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இதில், கதாநாயகியாக பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு மற்றும் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதனை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வெகு விரைவில் இத்திரைப்படம் வெள்ளிதிரைக்கு வர உள்ளது.

அந்த வகையில், கடந்த ஏப்., 2-ம் தேதி பீஸ்ட் பட டிரைலர் வெளியானது. இதையடுத்து, அவர்களின் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தனர். இதற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுச்சாமி, பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள் மீதும் அதனை தடுக்க தவறிய நடிகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து, பீஸ்ட் திரைப்படத்தில் வெளியான டிரைலரில், நடிகர் விஜய் கத்தியால் பேனரை கிழிப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இதுதான், தற்பொழுது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. இது ஒரு குறிப்பிட்ட கட்சியை தாக்கி எடுக்கப்பட்டுள்ளது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசு பதவியில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர்கள், மீம்ஸ்கள், பேனர்கள், வாயிலாக கருத்து தெரிவித்தால் உடனே அவர்கள் இயக்கத்தை விட்டு நீக்கப்படுவார்கள் என நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த செய்தியினை பாலிமர் ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it