தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா, உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைம் உத்தரவிட்ட பிறகும் தனது நிலையில் பிடிவாதமாக உள்ளது. இந்த நிலையில் காவிரி பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் உள்ளன என்பதை நாட்டிற்கு தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.