ஆம்பூர் பஸ் ஸ்டாண்டில் அவசரத் தாலி கட்டிய காதல் ஜோடி: வைரலாகும் வீடியோ!

ஆம்பூர் பஸ் ஸ்டாண்டில் அவசரத் தாலி கட்டிய காதல் ஜோடி: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

ஆம்பூர் பஸ் ஸ்டாண்டில் காதல் ஜோடி ஒன்று அவசர அவசரமாக தாலி கட்டிக் கொண்டு பஸ் ஏறிச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அண்ணா பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. இந்த பேருந்து நிலையம் மிகவும் பிஸியானது. அதேசமயம், இரவு நேரத்தில் வெறிச்சோடிக் கிடக்கும். இந்த சூழலில், நேற்று இரவு இப்பேருந்து நிலையத்துக்கு வந்த காதல் ஜோடி ஒன்று, பதட்டத்துடன் அங்குமிங்குமாகச் சுற்றித் திரிந்தது. பின்னர், சுமார் 9 மணியளவில் பேருந்து நிலையத்தின் பின்புறம் இருந்த கழிப்பறையின் அருகே சென்றது. பிறகு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தின் பின்புறம் சென்றது அந்த ஜோடி.

இதன் பிறகு, அந்த இளைஞர் தனது பாக்கெட்டில் வைத்திருந்த தாலிக் கயிற்றை எடுத்து, அந்த இளம்பெண்ணின் கழுத்தில் கட்டினார். பின்னர், இருவரும் அங்கிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்று, அங்கு நின்றிருந்த பஸ்ஸில் ஏறிச் சென்று விட்டனர். இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த நபர் ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். பிறகு, அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய அந்த நபர் யார்? இருவரும் கல்லூரி மாணவர்களா?  எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து ஆம்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, கடந்தாண்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு, இளைஞர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it