பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். அந்த வகையில், தனது கட்சியின் நிர்வாகிகளிடம் உரையாற்றும் போது இவ்வாறு கூறினார் : வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். தமிழர்கள் இருமுறை பிரதமர் ஆவதை தவறவிட காரணம் தி.மு.க. தான். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 இடங்களில் வெற்றி பெற நாம் இலக்கு நிர்ணயிப்போம் என சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா தெரிவித்திருந்தார்.