ஆ. ராசாவை முதல்வராக்க முடியுமா: நீங்கதான் சமூகநீதி காவலர்களாச்சே?

ஆ. ராசாவை முதல்வராக்க முடியுமா: நீங்கதான் சமூகநீதி காவலர்களாச்சே?

Share it if you like it

சாணக்கியா இணையதள ஊடகத்தில் தி.மு.க.வை ரங்கராஜ் பாண்டே வெளுத்து வாங்கியிருக்கிறார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அந்த வகையில், வேலூர் காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, இரண்டு தமிழர்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவர், காமராஜர் மற்றொருவர் மூப்பனார். இதனை, தடுத்து நிறுத்தியது தி.மு.க. என சாடியிருந்தார். அமித்ஷாவின் இந்த கருத்து பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் எல்.முருகனை பாரதப் பிரதமராக அமர வைக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிரபல ஊடக நெறியாளர் பாண்டே சாணக்கியா இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அவரிடம், நேர்காணல் கண்ட தம்பி, தமிழக முதல்வர் கூறியதை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார். அதற்கு, பாண்டே, அது பா.ஜ.க. பார்த்து கொள்ளும் நீங்கள் ஆ. ராசாவை முதல்வர் ஆக்க முடியுமா? நீங்கள் தானே சமூகநீதியை பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it