அமித்ஷா உடன் தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார்கள் திடீர் சந்திப்பு!

அமித்ஷா உடன் தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார்கள் திடீர் சந்திப்பு!

Share it if you like it

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்கு திரை உலக நடிகர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வென்ற “ஆர்ஆர்ஆர்” படக்குழு வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பியது. இதையடுத்து, அந்த குழு ஆஸ்கர் வெற்றியை இந்தியாவில் கொண்டாடி வருகிறது. அந்தவகையில், “ஆர்ஆர்ஆர்” படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ராம் சரண், தனது தந்தையும் நடிகருமான சிரஞ்சிவியுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, நடிகர் ராம் சரண், உள்துறை அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போற்றினார். பதிலுக்கு, உள்துறை அமைச்சரும் ராம் சரணுக்கு பொன்னாடை வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து, தெலுங்கு நடிகரும், ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ராம் சரணை வாழ்த்தி ஆசீர்வதித்ததற்காக நன்றி அமித் ஷா ஜி. ஆஸ்கர் விருது வென்று வந்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it