பொறியில் சிக்கிய எலி போல் அலறிய திருடன்!

பொறியில் சிக்கிய எலி போல் அலறிய திருடன்!

Share it if you like it

அம்மன் கோவிலில் திருட முயன்று வெளியே வர முடியாமல் மாட்டி கொண்ட திருடனின் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக துவங்கியுள்ளது.  

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜடிமுடி என்ற கிராமம் உள்ளது. இங்கு புகழ்பெற்ற எல்லம்மா கோவில் உள்ளது. இந்த அம்மனை கிராம தேவதையாக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில், நேற்றைய தினம் பாபா ராவ் என்பவன் திருட உள்ளே சென்றுள்ளான். அப்பொழுது, கோவிலின் பின்னால் ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த செங்கல்லை நீக்கி விட்டு, அதன் வழியாக சென்ற அவன் அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடிவிட்டு மீண்டும் அதே வழியாக வெளியே வர முயன்று இருக்கிறான். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பாதி உடல் வெளியேயும் மீது உடல் கோவில் உள்ளேயும் சிக்கி கொண்டது. ஒரு கட்டத்தில் வலியை தாங்க முடியாமல் கதறியுள்ளான். திருடனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள், பாபா ராவ் கோவில் சுவரில் வித்தியாசமான முறையில் தொங்குவதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, பொறியில் சிக்கிய எலி போல் இருந்த அவனை கிராம மக்கள் காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it