காங்கிரஸ் நடத்திய திடீர் தாக்குதல்: களத்தில் குதித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.!

காங்கிரஸ் நடத்திய திடீர் தாக்குதல்: களத்தில் குதித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.!

Share it if you like it

பா.ஜ.க. தொண்டர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் நடத்திய திடீர் தாக்குதலை கண்டித்து நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் நடத்திய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மற்றும் தொண்டர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், பா.ஜ.க. தொண்டர் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், நாகர்கோவில் பாஜக அலுவலகத்தின் மீதும் தொண்டர்கள் மீதும் காங்கிரஸை சேர்ந்த ரவுடிகள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி தனது இருப்பைக் காட்ட இது போன்ற வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது வெட்கக்கேடானது.

தமிழக காவல்துறைஉடனடியாக பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். அழிவின் விளிம்பிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, இது போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்,

பா.ஜ.க. தொண்டர்கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாகர்கோவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர். காந்தி தாக்குதல் நடத்திய காங்கிரஸ் குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்திய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Share it if you like it