கொடுத்த வாக்கை காப்பாற்றிய பா.ஜ.க. தலைவர் !

கொடுத்த வாக்கை காப்பாற்றிய பா.ஜ.க. தலைவர் !

Share it if you like it

தி.மு.க. கவுன்சிலரால் அடித்துக் கொள்ளப்பட்ட பிரபு குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவ வீரராக பணியாற்றியவர். இவரை, தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது அடியாட்கள் அடித்து கொலை செய்த சம்பவம் இன்றுவரை பொதுமக்களிடையே பேசுப்பொருளாக இருந்து வருகிறது. எனினும், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வரை இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

இதனிடையே, ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு பா.ஜ.க. என்றும் துணையாக இருக்கும். அதேபோல, கட்சியின் சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அண்ணாமலை கூறியிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில், ராணுவ வீரரின் குடும்பத்தை நேற்று பா.ஜ.க. தலைவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it