சேது சமுத்திர திட்டம்:  தி.மு.க.வின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய அண்ணாமலை!

சேது சமுத்திர திட்டம்: தி.மு.க.வின் சூழ்ச்சியை அம்பலப்படுத்திய அண்ணாமலை!

Share it if you like it

சேது சமுத்திர திட்டத்தால் தி.மு.க.விற்கு மட்டுமே பாலம் மீனவர்களுக்கு அல்ல என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; தற்போதைய திட்டத்தின்படி சேது சமூத்திர திட்டத்தை நிறைவேற்றினால் சூழலியல் பேரிடர் ஏற்படும். தற்போதைய சேது சமுத்திர திட்டத்தை தமிழ்நாடு பா.ஜ.க. எதிர்க்கிறது.

ராமர் பாலம் பாதிக்கப்படாமல் திட்டத்தை செயல்படுத்தினால் பா.ஜ.க. முழு ஆதரவினை வழங்கும். புதிய பாதை வழியாக சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வர வேண்டும். தற்போதைய திட்டப்படி பெரிய கப்பல்கள் அந்த வழியே பயணிக்க முடியாது. 

சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டு மீனவர்கள், தொழில் முனைவோருக்கு பயன் தராது. அதே வேளையில், சேது சமுத்திர திட்டத்தால் தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழிக்கு மட்டுமே அதிக லாபத்தை தரும். சேது சமுத்திர திட்டம் குறித்து தெளிவுபடுத்தாமல் முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் என அண்ணாமலை கூறியிருக்கிறார்.  


Share it if you like it