பெற்றோர்கள் முன்பாக எமோஷனான அண்ணாமலை!

பெற்றோர்கள் முன்பாக எமோஷனான அண்ணாமலை!

Share it if you like it

பெற்றோர் முன் எமோஷனான அண்ணாமலையின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். அந்தவகையில், இன்றை இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறார். இவர், பா.ஜ.க.வின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்னர், அக்கட்சியின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் முன்னேறி வருகிறது. இவரது, எளிமை, பணிவு மற்றும் அறிவுபூர்வமான பேச்சு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், மாற்று கட்சியை சேர்ந்த பலர் தங்களை பா.ஜ.க.வில் தொடர்ந்து இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தாம் படித்த கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் தனது பெற்றோருடன் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது, தனது பெற்றோர் முன்னிலையில் பேசும் போது, ஒரு 50 வீடுகள் இருக்கும் குக்கிராமத்தில் பிறந்து, முதல் முறையாக கிராமத்தை விட்டு நகரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க போகும் போது இருந்த உணர்வுகள், இன்று அதே கல்லூரியில் விருது வாங்குவது ஒரு நெகிழ்வான தருணம் என குறிப்பிட்டார்.

மேலும், அவர் பேசும் போது உணர்ச்சி வசப்பட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it