”சக்ஸஸ்” பா.ஜ.க.விடம் அடிபணிந்த அரசு!

”சக்ஸஸ்” பா.ஜ.க.விடம் அடிபணிந்த அரசு!

Share it if you like it

தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டினப்பிரவேசத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 22-ம் தேதி தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ஹிந்துக்கள் சார்ந்த நிகழ்ச்சி என்பதால் இதற்கு, திராவிடர் கழகத்தினர் வழக்கம்போல கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுகிறது என மே 2-ம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இச்சம்பவம், ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழக அரசின் இச்செயலுக்கு பல்வேறு தரப்புகளிலுமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுதவிர, தமிழகத்திலுள்ள அனைத்து ஆதீனகர்தர்களும் தங்களது உள்ள குமுறல்களை வெளிப்படுத்தி இருந்தனர்.

தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.. இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பட்டணப் பிரவேசம் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளார் என தருமபுரம் ஆதீனம் பேட்டியளித்து இருப்பது ஹிந்துக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தான் கரணம் என அக்கட்சி தொண்டர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it