பா.ஜ.க. பலத்தோடு வருகிறது: தி.மு.க.வினர் தூங்கவே கூடாது – திருச்சி சிவா அலறல்!

பா.ஜ.க. பலத்தோடு வருகிறது: தி.மு.க.வினர் தூங்கவே கூடாது – திருச்சி சிவா அலறல்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. பலத்தோடு வருகிறது. ஆகவே, நாம் தூங்க கூடாது என அக்கட்சி தொண்டர்களுக்கு தி.மு.க. மூத்த தலைவர் எச்சரிக்கை விடுத்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவரது, வருகைக்கு பின்பு அக்கட்சியின் வளர்ச்சி அரசு வேகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பெரும் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். குறிப்பாக, ஆளும் கட்சியான தி.மு.க. அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு, அக்கட்சிக்கு பெரும் தலைவலியாக அண்ணாமலை மாறி இருக்கிறார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனிடையே, தி.மு.க. மூத்த தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன். இவர், தனது கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசினார் ;

நம்முடைய எதிரி நம்மிடம் இருந்து பிரிந்து சென்றவன் அது அ.தி.மு.க. அவனை சந்தித்தோம். பா.ஜ.க. இங்கு வேகமாக வளர்ந்து வருகிறது. அவர்களிடம், பண பலம், அதிகார பலம் உள்ளது. அவர்களுக்கு, இணையாக நாம் சண்டை செய்ய வேண்டும். பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் நம் பூத் கமிட்டி பலமாக இருக்க வேண்டும். இந்த கமிட்டியை ஜாக்கிரதையாக கொண்டு வர வேண்டும் என அண்ணாமலையை மனதில் வைத்து கொண்டு துரைமுருகன் அலறி இருந்தார்.

இந்நிலையில், தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான திருச்சி சிவா தனது கட்சி தொண்டர்களிடம், எதிரிகளை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பகைவர்கள் (பா.ஜ.க.) பலத்தோடு வருகிறார்கள். நேரடியாக வருகிறார்கள். பார்த்து கொள்வோம் என்று படுத்து கொண்டு தூங்குவதற்கு மாறாக, களத்தில் நிமிர்ந்து நாம் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டிய காலகட்டம் இது என்பதை யாரும் மறந்து விட கூடாது. நான், பேச்சு ஓட்டத்தில் சொல்லவில்லை. குறித்து கொள்ளுங்கள். நான் வேறுமாதிரி ஒளிவு மறைவாக பேசவில்லை. பகைவர்கள் பலத்தோடு வருகிறார்கள் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை நினைத்து திருச்சி சிவாவும் கதறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Image

Share it if you like it