யாரு சாமி இவரு: அண்ணாமலைக்கே டஃப் கொடுக்கும் சிறுவன்!

யாரு சாமி இவரு: அண்ணாமலைக்கே டஃப் கொடுக்கும் சிறுவன்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் காணொளிகளை டப் மாஸ் செய்து மற்றவர்களின் கவனத்தை சிறுவன் ஒருவன் ஈர்த்து வருகிறான்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், கர்நாடக காவல்துறையில் இருந்த சமயத்தில், அம்மாநில மக்களால் சிங்கம் என்று அழைக்கப்பட்டவர். இதனிடையே, தனது பணியை ராஜினாமா செய்து விட்டு தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார். இதையடுத்து, we the leaders எனும் தொண்டு நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்தின், மூலம் தன்னால் இயன்ற உதவிகளை கரூர் மக்களுக்கு செய்து வந்தார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் ( முன்னாள் ) எல்.முருகன் தலைமையில் டெல்லி சென்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க. துணை தலைவர் பதவி அவரை தேடி வந்தது. இந்த நிலையில், டெல்லி மேலிடம் எல். முருகனை மத்திய அமைச்சராக தேர்வு செய்தது. இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.

சி.பி. ராதா கிருஷ்ணன், எல்.முருகன், பொன். ராதா கிருஷ்ணன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் போன்றே இவரும் செயல்படுவார் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கருதி வந்தன. ஆனால், இவரது அதிரடி அரசியல் தி.முக. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கதி கலங்க வைத்துள்ளது. இவரது எளிமை, பணிவு, தன்னடக்கம், தெளிவான சிந்தனை மற்றும் புள்ளி விவரங்களுடன் பேசுவது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்காரணமாக, தமிழக இளைஞர்களின் எழுச்சி நாயகனாக அண்ணாமலை மாறி இருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார். அந்த வகையில், பள்ளி செல்லும் சிறுவன் ஒருவன் அண்ணாமலையின் பத்திரிகையாளர்களின் சந்திப்பை தொடர்ந்து டப் மேஷ் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறான். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it