வாட்ச் விவகாரம் குறித்து பிரபல இணையதள ஊடகமான சாணக்கியா மக்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் மக்களிடம் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதையடுத்து, யூ-டியூப் சேனல்கள், ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இணையதள ஊடகமான சாணக்யா, வாட்ச் விவகாரத்தில் மக்களிடம் சிக்கிக் கொண்டது யார்? என்ற தலைப்பில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், 28,807 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களுள் அது அண்ணாமலை என்று 19.90 சதவீதம் பேரும், செந்தில் பாலாஜி என்று 80.10 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
Without bill saraya minister
Yes PERFECTLY RIGHT.