புதிய தலைமுறை நிருபரின் சவாலை நாங்கள் ஏற்க மாட்டோம்: நிர்வாகம் அந்தர் பல்டி!

புதிய தலைமுறை நிருபரின் சவாலை நாங்கள் ஏற்க மாட்டோம்: நிர்வாகம் அந்தர் பல்டி!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுக்கும் ஆதாரத்தை வெளியிட தயார் என புதிய தலைமுறை நிபருர் கூறினார். இந்நிலையில், அந்த ஊடக நிறுவனம் திடீரென அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது, புதிய தலைமுறை ஊடக நிருபருக்கும், பா.ஜ.க. தலைவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அண்ணாமலை கொடுக்கும் ஆதாரத்தை புதிய தலைமுறையில் ஒரு மணி நேரம் நேரடி ஒலிபரப்பு செய்ய தயார் என்று அந்த ஊடக நிருபர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், புதியதலைமுறை நிர்வாகம் பா.ஜ.க. தலைவர் கொடுக்கும் ஆதாரத்தை எங்கள் தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விரிவாக பதிவு செய்துள்ளார். அவர், வெளியிட்ட பதிவு இதோ ;

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அழைப்பை ஏற்று பி.ஜி.ஆர் முறைகேடுகள் குறித்த ஆவணங்களை வெளியிட்டு அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என்னை பணித்திருந்தார். இன்று மாலை 7-மணிக்கு நேரலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக புதிய தலைமுறையின் ஆசிரியர் என்னிடம் கூறியிருந்த நிலையில், திடீரென்று நேற்று இரவு இந்த நேரலை நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும், அதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் மற்ற கட்சிகள் கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியையே நடத்த புதிய தலைமுறை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்றும் கூறினார்.

ஆனால், புதிய தலைமுறை செய்தியாளரின் சவாலை ஏற்று ஆவணங்களை வெளியிட்டு அதுகுறித்த விளக்கத்தை மக்களுக்கு அளித்த பின்னர் எந்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்தி கொள்ள நமக்கு மறுப்பேதும் இல்லை என்று நான் கூறினேன். ஆனால், மக்களிடம் நேரடியாக பி.ஜி.ஆர் முறைகேடுகள் குறித்த விளக்கத்தை பா.ஜ.க. அளிக்க புதிய தலைமுறை மறுத்து விட்டது.

பா.ஜ.க. தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் புதிய தலைமுறையின் சவாலை ஏற்று கொண்டு ஆவணங்களை தயாராக வைத்திருந்தும், நான் நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருந்தும், புதிய தலைமுறையின் இந்த மாற்றத்திற்கு காரணம் ஆளும் கட்சியின் அச்சுறுத்தலா அல்லது முறைகேடுகளை பா.ஜ.க அம்பலப்படுத்தி விடுமோ என்ற தயக்கமா என்பது புரியவில்லை.

எது எப்படியிருந்ததாலும் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து ஒழிக்க திரு. அண்ணாமலை அவர்களின் தலைமையில் நாம் உறுதியாக உள்ளோம். புதிய தலைமுறை தொலைக்காட்சி முறைகேடுகள் குறித்த ஆவணங்களை மக்களிடம் வெளிப்படுத்த தயாராக இல்லாததால் இன்றைய நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Image

Share it if you like it