500 கோடி இல்ல, 1,000 கோடி கேளுங்கண்ணே… ஆர்.எஸ்.பாரதியை உசுப்பேற்றிய ராணுவ வீரர்!

500 கோடி இல்ல, 1,000 கோடி கேளுங்கண்ணே… ஆர்.எஸ்.பாரதியை உசுப்பேற்றிய ராணுவ வீரர்!

Share it if you like it

500 கோடி இல்ல, 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேளுங்க என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை உசுப்பேற்றி விட்டிருக்கிறார் ராணுவ வீரர் ஒருவர்.

விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. மேகாலயாவில் சி.ஆர்.பி.எஃப். வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர், தமிழக அரசியல் குறித்தும், தேசிய அரசியல் குறித்தும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அட்டாக் செய்வதில் கில்லாடி. தனி தமிழ் நாடு கேட்ட திருமாவளவனுக்கு எதிராக இவர் வெளியிட்ட வீடியோ வைரலான நிலையில், அக்கட்சியினர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் 500 கோடி அல்ல, 1,000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்குமாறு ஆர்.எஸ்.பாரதியை உசுப்பேற்றி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் குருமூர்த்தி என்பதை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை கிளக் செய்யுங்கள்…


Share it if you like it