நீங்களும் மதமாற்றம் செய்யுங்க: உளறிக் கொட்டும் அருணன்!

நீங்களும் மதமாற்றம் செய்யுங்க: உளறிக் கொட்டும் அருணன்!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானால் ‘லூசு’ என்று வர்ணிக்கப்பட்ட சீன கைக்கூலியான அருணன், மாணவி லாவண்யா மரணத்தை இழிவுபடுத்தும் வகையில், காஞ்சிமடம் மூலம் மதமாற்றம் செய்ய வேண்டியதுதானே என்று கருத்துத் தெரிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் அன்னிய நாட்டுக் கைக்கூலிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசு கொண்டுவரும் நல பல திட்டங்களை, குறைசொல்வதையும், மக்கள் மத்தியில் திசை திருப்பிவிடுவதையுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இவர்களில் முக்கியமானவர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான அருணன். சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக் கொட்டுவதுதான் இவரது வேலை. இப்படித்தான் ஒரு நிகழ்ச்சியில் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொட்ட, ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘போய்யா லூசு’ என்று நேரலை நிகழ்ச்சியிலேயே திட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், அருணன் தனது போக்கை மாற்றிக் கொள்ளவே இல்லை. சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருணன், அமர் ஜவான் ஜோதியின் வரலாறு தெரியாமல் கண்டபடி உளறிக் கொட்டினார். இதனால், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் திாயகராஜனால் மூக்குடைபட்டார். இந்த நிலையில்தான், மதம் மாற மறுத்து தற்கொலை செய்து கொண்ட லாவண்யாவின் மரணத்தை இழிவுபடுத்தும் வகையில் அருணன் கூறியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து அருணன் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ‘மதம் மாறுவது அரசியல் சாசனம் தந்துள்ள ஓர் உரிமை. கல்வியின் மூலம் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள் என்றால் அதேவழியை இந்துக்களும் பின்பற்றலாம்! சங்கரமடமும், ஜீயர்மடமும் பிற மதத்தவருக்கு கல்வி தந்து தம் மதத்திற்கு மாற்றலாம். அவர்களை எந்த சாதியில் சேர்ப்பது என்பதை முடிவு செய்திடவும்’ என்று நக்கலாக பதிவிட்டிருக்கிறார். இந்துக்களையும், லாவண்யா மரணத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அருணன் கூறியிருந்தாலும், இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அதாவது, கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ இந்துவாக மாறினால், அதற்குப் பெயர் மத மாற்றம் இல்லை. தாய் மதம் திரும்புதல் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல், அருணன் கருத்து கந்தசாமி போல கருத்துச் சொல்லி இருப்பதுதான் வேடிக்கை.


Share it if you like it