கலைஞர் உணவகம் தொடர்பாக ஆளும் தி.மு.க அரசிற்கு தோழர் அருணன் அறிவுரை. .
மாநிலம் முழுவதும் சுமார் 500 கலைஞர் உணவகம் அமைக்க உள்ளதாகவும், அதற்கான 100 சதவிகித நிதியினை மத்திய பா.ஜ.க அரசே கொடுக்க வேண்டும் என சமீபத்தில் அமைச்சர் சங்கரபாணி தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராக உள்ள அருணன் அவர்கள் கலைஞர் உணவகம் குறித்து அவர் தெரிவித்த கருத்து தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருணன் டுவிட்டர் பதிவு.
அம்மா உணவகம்” என்று அதிமுக அரசு ஆரம்பிச்சதால “கலைஞர் உணவகம்” என்று திமுக அரசு ஆரம்பிக்குது. ஒழுங்கா “அரசு உணவகம்” என்று ஆரம்பிச்சிருக்கலாம்.