அப்பாவி பழங்குடி இளைஞர் மதுவை அடித்தே கொன்ற 16 குற்றவாளிகளில் ஒருவரான சம்சுதீனுக்கு பதவி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..!

அப்பாவி பழங்குடி இளைஞர் மதுவை அடித்தே கொன்ற 16 குற்றவாளிகளில் ஒருவரான சம்சுதீனுக்கு பதவி கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி..!

Share it if you like it

இந்தியாவை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று கேரள மாநிலத்தை சேர்ந்த அப்பாவி இளைஞர் மது என்பவரை 16 பேர் கொண்ட நண்பர்கள் குழு பொய் குற்றச்சாட்டு சுமத்தி அடித்தே கொன்ற சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலர் ஜாமீனில் ஜாலியாக வெளியில் சுற்றி கொண்டு இருக்கும் இந்நிலையில், மீதி இருந்த ஒரு குற்றவாளியுமான சம்சுதீனுக்கு அண்மையில் ஜாமின் கிடைத்து உள்ளது. வெளியில் வந்த அவனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்ட சம்பவம் கேரள மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க அரசு, மோடி, யோகி, என்றால் கருத்து சொல்ல உடனே ஓடி வரும் அருணன், சுந்தரவள்ளி, போன்ற சமூக நீதி பேசும் போராளிகள் எங்கே? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it