அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல் : காலியாகும் காங்கிரஸ் கூடாரம் !

அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகல் : காலியாகும் காங்கிரஸ் கூடாரம் !

Share it if you like it

மஹாராஷ்டிராவில் முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், தற்போதைய எம்எல்ஏ.,வுமான அசோக் சவான் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அம்மாநிலத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மிலிந்த் தியோரா, பாபா சித்திக் ஆகியோர் விலகிய நிலையில், அசோக் சவானின் விலகல், அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த முரளி தியோரா மகன் மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். அதேபோல், சில நாட்களுக்கு முன்னதாக மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக பதவி வகித்த பாபா சித்திக் அக்கட்சியில் இருந்து விலகினார்.

இப்படி அடுத்தடுத்து காங்., தலைவர்கள் வெளியேறுவதால் காலியாகிவரும் காங்., கூடாரத்தில் அடுத்ததாக முன்னாள் முதல்வர் அசோக் சவானும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் காங்., அதிர்ச்சியடைந்துள்ளது. தற்போது காங்., எம்எல்ஏ.,வாகவும், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அசோக் சவான், பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share it if you like it