அஸ்ஸாமில் மதரஸா அதிரடி இடிப்பு!

அஸ்ஸாமில் மதரஸா அதிரடி இடிப்பு!

Share it if you like it

அஸ்ஸாமில் அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த மதகுரு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நடத்தி வந்த மதரஸாவையும் அம்மாநில அரசு இன்று இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலம் மோரிகாவ்ன் மாவட்டம் மொய்ராபரியில் ஜாமி-உல்-ஹூதா என்கிற மதரஸா செயல்பட்டு வருகிறது. இந்த மதரஸாவை 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வந்தார் முப்தி முஸ்தபா. முஸ்லீம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த மதரஸாவில் வைத்து பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இளைஞர்கள் தூண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தவிர, மாநிலத்துக்கும் நாட்டுக்கும் எதிரான சதித் திட்டங்கள் இந்த மதரஸாவில் தீட்டப்படுவதாகவும், மாநில போலீஸாருக்கும், மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கும் தகவல் கிடைத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மதரஸாவை நடத்தி வரும் முப்தி முஸ்தபா, பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா, பங்களாதேஷின் பயங்கரவாத அமைப்பான அன்சருல்லா பங்களா அணி உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். மேலும், மேற்கண்ட பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும், பல இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் நிதியுதவியும் பெற்று வந்திருக்கிறார். இதையடுத்து, முப்தி முஸ்தபாவின் வீடு மற்றும் மதரஸாவில் மாநில போலீஸாரும், ராணுவத்தினரும், இதர உளவுப் பிரிவினரும் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல சென்போன்கள், வங்கி பாஸ்புத்தகங்கள் மற்றும் பல முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, முப்தி முஸ்தபாவை கைது செய்த போலீஸார், ஜாமி-உல்-ஹூதா மசூதிக்கும் சீல் வைத்தனர்.

இந்த நிலையில்தான், அஸ்ஸாம் மாநில அரசு இன்று காலை முப்தி முஸ்தபா நடத்தி வந்த மதரஸாவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோரிகான் எஸ்.பி. அபர்ணா, “பங்களாதேஷை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அன்சாருல்லா பங்களா அணியின் தலைவர் அமிருதீன் அன்சாரியுடன் முப்தி முஸ்தபா நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்திருக்கிறது. மேலும், இந்த ஜாமி-உல்-ஹூதா மதரஸாவில் முஸ்லீம் இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, இங்கு பயங்கரவாத அமைப்புகள் முகாமிட்டு, அஸ்ஸாமில் சில இடங்களை குறிவைத்து படிப்படியாக தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்திருக்கிறது. ஆகவே, டி.டி.எம்.ஏ., பி.டபுள்.டி. மற்றும் பிற அதிகாரிகளின் அனுமதியோடு இந்த மதரஸா இடிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.


Share it if you like it