ஊதிய மதபோதகர்… உயிர்த்தெழுந்த காது… ‘நிலைமறந்தவன்’ படத்தை மிஞ்சிய காட்சி!

ஊதிய மதபோதகர்… உயிர்த்தெழுந்த காது… ‘நிலைமறந்தவன்’ படத்தை மிஞ்சிய காட்சி!

Share it if you like it

3 வருடங்களாக கேட்காமல் இருந்த காதை கிறிஸ்தவ மதபோதகர் குணப்படுத்திய (!) அதிசயம் அரங்கேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

கிறிஸ்தவ மதத்தில் கத்தோலிக்கம், புரொட்ட ஸ்டாண்டு, அல்லேலூயா உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றில் அல்லேலூயா பிரிவைச் சேர்ந்த மத போதகர்கள்தான் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்துவதாகக் காட்டிக் கொள்பவர்கள். இயேசுவால் இந்த அதிசயம் நடந்தது, அந்த அதிசயம் நடந்தது என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருபவர்கள். இப்பிரிவைச் சேர்ந்த மதபோதகர்கள் செய்யும் பித்தலாட்டங்கள் சொல்லி மாளாது. உதாரணமாக, குருடனுக்கு பார்வை வரச் செய்வது, முடமானவரை நடக்கச் செய்வது, கை, கால் செயலிழந்தவரை சரி செய்வது, சி.டி. மூலம் கேன்சர் வியாதியை குணப்படுத்துவது, நீண்டகாலமாக கருத்தரிக்காத பெண்ணை கர்ப்பிணியாக்குவது என அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில், அல்லேலூயா பிரிவைச் சேர்ந்த ஒரு மத போதகர் காது கேளாத ஒருவருக்கு காது கேட்க வைத்து அதிசயம் நிகழ்த்தியதாக கப்ஸா விட்டிருக்கிறார். அதாவது, இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், 3 வருடங்களாக வலது புறக் காது கேட்காமல் இருந்ததாகக் கூறிக் கொண்டு, குறிப்பிட்ட அல்லேலூயா சபைக்கு ஒருவர் வருகிறார். அவரிடம் அந்த சபையின் மதபோதகர் சில கேள்விகளை கேட்கிறார். அதற்கு அந்த நபர், தனது காதில் இருந்து கஞ்சி போல வழியும். எத்தனையோ டாக்டர்களை பார்த்தும் சரியாகவில்லை என்று கூறுகிறார். உடனே, அந்த மதபோதகர், அந்த நபரின் காதில் ஊதுகிறார். இதன் பிறகு அந்த நபர் தனக்கு காது கேட்பதாகவும், ஜீசஸ்தான் தனது காதை சரி செய்ததாகவும் கூறுகிறார். இதைக் கேட்டு அங்கிருந்த சபை மக்கள், கரகோஷம் எழுப்புகிறார்கள்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் எத்தனை நிலைமறந்தவன் படம் எடுத்தாலும் உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.


Share it if you like it