சற்றுமுன் ED என்ற அமலாக்க இயக்குநரகம் அமைப்பானது தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், பிஎம்எல்ஏ, 2002 இன் விதிகளின் கீழ், திமுகவின் முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 அசையாச் சொத்துகளை, தனது பினாமி கம்பெனி M/s கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நடத்தி வந்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் கைப்பற்றியுள்ளது. ஏ.ராஜா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தற்காலிக இணைப்பு உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.