நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி!

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி!

Share it if you like it

நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவலர் மீது ஆட்டோவை ஏற்றி விட்டு தப்பியோடிய ஓட்டுனர். இதுகுறித்த செய்தியினை பிரபல இணையதள ஊடகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்றிரவு (ஞாயிறு) வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது, பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பொன்ராஜ் ஆட்டோ, ஒன்றினை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளார். ஆனால், ஆட்டோவை நிறுத்தாமல் ஓட்டுனர் காவலர் மீது மோதிவிட்டு தப்பி சென்றுள்ளார். இச்சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கணொளியை டான் அப்டேஸ் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவறு செய்த ஆட்டோ ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it