மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்த அஸ்வத்தாமன்!

மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்த அஸ்வத்தாமன்!

Share it if you like it

பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் இரு மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க. மாநில செயலாளராக இருப்பவர் அஸ்வத்தாமன். இவர், நேற்றைய தினம் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை டெல்லியில் சந்தித்தார். அந்த வகையில், NLC க்காக மாநில அரசின் நில எடுப்பு நடவடிக்கைகளை, மக்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணும் வரை நிறுத்தி வைக்க கோரி வலியுறுத்தினார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட மக்களை வடலூரில் சந்தித்தார். பலரும் இது சம்பந்தமாக அவரிடம் மனு அளித்தனர். பின்பு பாதிக்கப்பட்ட வலங்கைமான் கிராமத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, ரயில்வே மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவை சந்தித்து கடலூர் பாண்டிச்சேரி ரயில் பாதை அமைத்த தந்ததற்காக நன்றிகளை தெரிவித்தார். மேலும், உளுந்தூர்பேட்டையில் ரயில் நிறுத்தம் கொண்டு வருவதற்கான மனுவினை மத்திய அமைச்சரிடம் அஸ்வத்தாமன் வழங்கினார்.


Share it if you like it