இது எல்லாம் ஒரு கேள்வியா?: பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவேசம்!

இது எல்லாம் ஒரு கேள்வியா?: பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவேசம்!

Share it if you like it

ஐ தமிழ் ஊடக நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் ஆவேசமான முறையில் பதில் அளித்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் என பன்முக தன்மை கொண்டவர் அஸ்வத்தாமன். இவர், ஐ தமிழ் இணையதள யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

தி.மு.க. ஊழல் செய்து இருக்கிறது. தி.மு.க. மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. தி.மு.க. தண்ணீர் வரியை உயர்த்தி இருக்கிறது. தி.மு.க. ஒரு சில ஊடகங்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு மக்களை எறும்புகளை போலவும், கொசுக்களை போலவும் நசுக்கி கொண்டிருக்கிறது. இதனை, நாங்கள் குற்றச்சாட்டுக்களாக வைக்கிறோம். எங்கள், மீது என்ன குற்றச்சாட்டினை வைப்பீர்கள்.

இந்தியா, என்கிற மக்களாட்சி எனும் நாடை 2-வது முறையாக நாங்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம். ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்களை காட்ட முடியவில்லை. மக்களுக்கு எதிரான ஒரு செயல்பாட்டினை காட்ட முடியவில்லை. கோடிகணக்கான மக்களுக்கு நன்மை செய்து இருக்கிறோம். தி.மு.க. எங்கள் மீது எப்படி? குற்றச்சாட்டினை வைப்பது என்று தெரியாமல் தவித்து வருகிறது.

இதனால், அவர் கட்சியை விட்டு போனார், இவர் கட்சியை விட்டு போனார் என்று எதற்கும் பயன்படாத குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். மக்களுக்காக களத்தில் பா.ஜ.க. நிற்கிறது. பா.ஜ.க.வின் மீது குற்றம் சுமத்துவதற்கு ஒரு சிறிய துரும்பு கூட கிடைக்கவில்லை. ஒரு துண்டு சீட்டு கூட கிடைக்கவில்லை. ஒரு ஊழல குற்றச்சாட்டு இல்லை. பத்து பைசாவுக்கு பயன் இல்லாத கேள்விகளை என்னிடம் முன் வைக்கிறீர்கள் என காட்டமான முறையில் பதில் அளித்துள்ளார்.


Share it if you like it